ஞாயிறு, 23 அக்டோபர், 2022

(அப் 21:27-40): யூதர்கள் பவுலின் ஊழியத்தை தவறாக புரிந்து கொண்டனர்

 எருசலேம் தேவாலயத்தில் பவுலின் சாட்சி.


21: 27-30 பரிசுத்த இடம்:

எருசலேம் தேவாலயத்தின் உள்ளே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது. அதுவே யூதரையும் புறவின மக்களையும் பிரிக்கும் எல்லை. அந்த சுவரைத் தாண்டி செல்ல புறவின மக்களுக்கு அனுமதி இல்லை (எபே 2:14). 

அந்த சுவரில் இப்படி எழுதப்பட்டிருக்கும். 

"No foreigner may enter with the barricade which surrounds the sanctuary and enclosure. Anyone caught doing so will himself to blame for his ensuring death."

'தேவாலயம் மற்றும் அதன் சுற்றுச்சுவரைச் சுற்றியிருக்கும் இந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எந்த வெளி இனத்தவரும் உள்ளே நுழையக்கூடாது. மீறினால் பிடிபடும் எவரும் அவரது மரணத்திற்கு அவர் தாமே காரணம்." ரோம அரசாங்கம் இந்தச் சிறப்பு உரிமையை யூதர்களுக்கு வழங்கியிருந்தது. 

தேவாலயத்தில் கலவரம் வெடிக்க, பவுல் கைது செய்யப்பட இந்த சட்டம் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. 

பவுல் நான்கு நசரேய விரதமிருந்த யூதர்களுடன் அவர்கள் பலிகளுக்கான  செலவைச் செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஏழு நாட்கள் அமைதியாகக் கடந்தது. 

அப்போது சில ஆசியர்கள் பவுலை தேவாலயத்தில் பார்த்தனர்.  எபேசுவிலிருந்து வந்திருந்த யூதர்களுக்கு துரோப்பீம் நன்கு தெரியும். பவுல் எங்குச் சென்றாலும் அவரது புறவின நண்பர்களை உடன் கூட்டிச் செல்வது உண்டு. 

இப்போது பவுல் ஆலயத்தில் இருக்கிறார். ஆகவே நிச்சயம் அவரது புறவின நண்பர்களைத் தேவாலயத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்திருப்பார் என அவசரமாக முடிவு செய்தனர். அந்த நம்பிக்கையில், ''பவுல் கிரேக்கர்களை உள்ளே அழைத்துக்கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப் படுத்தி விட்டார்'' எனக் கூக்குரலிட்டனர். 

உடன் பெரும் கூட்டம் கூடியது. பவுலைப் பிடித்து தேவாலத்திற்க்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர். ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் பவுலை கொலை செய்ய முயற்சி செய்கையில் ரோமர் படை உள்ளே நுழைந்தது.

இந்த சம்பவம் எபேசுவில், ''தியான்னாள் ஆலயத்தில்'' இதே விதத்தில் நிகழ்ந்த கலவரத்தை நினைவு படுத்துகிறது. இந்த வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

அப் 19:29 பட்டிணம் முழுவதும் கலகம். அவர்கள் ஒருமனப்பட்டுப் பாய்ந்து கொண்டு ஓடினார்கள்.

அப் 21:30 நகரம் முழுவதும் கலக்கம். மக்கள் கூட்டமாய் கூடி பவுலை இழுத்துக்கொண்டு போனார்கள்.

அப் 19:32 கூட்டத்தில் அமளி. சிலர் இப்படியும் சிலர் அப்படியும் பேசினார்கள். தாங்கள் கூடி வந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியவில்லை.

அப் 21:34 மக்கள் பல விதமாகச் சத்தமிட்டனர். சந்தடியினாலே எதற்காக இந்த கலவரம் என நிச்சயமாக அறிய முடியவில்லை.

"Every mob, in its ignorance and blindness and bewilderment , is a League of Frightened Men that   seeks reassurance in collective action" - Max Lerner wrote in "The Unfinished Country"

"கலவர கும்பல் என்பது பயந்த கோழைகளின் கூட்டம் ஆகும். அறியாமை, புரிந்து கொள்ளாத குருட்டுத்தன்மை மற்றும் கட்டுக்கடங்காமல் செயல் புரிவது அந்த கூட்டத்தின் இயல்பு. ஒரு கும்பலாக மட்டுமே அவர்கள் இத்தகைய நடவடிக்கையில்  ஈடுபடுவர்."

Benjamin Franklin said that a mob was "a monster with heads enough, but no brains."

கலவர கும்பல் என்பதில் ''தலைகள் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். ஆனால் அது மூளை செயல்படாத ஓர் வெறி பிடித்த கூட்டம்.'' 

1: 31-40 -கிலவுதியு லீசியா (Claudius Lysias):

லீசியா வந்தவுடன் பவுலை அடிப்பது நிறுத்தப்பட்டது. பவுலை குற்றம் கூறியவர்கள் நழுவி ஓடிவிட்டனர். ஏனெனில் அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அறிந்தவுடன் ஓடிவிட்டனர். பவுலுடன் புறவின நண்பர்கள் ஒருவரும் இல்லை.

லீசியா விசாரித்த போது ஒருவராலும் தெளிவான குற்றச்சாட்டைச் சொல்ல முடியவில்லை. அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை அறியும் படிக்கு விசாரணை செய்யக் கோட்டைக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார். மக்கள் கூட்டத்தின் நிமித்தம் போர் வீரர்கள் பவுலை படிகளில் தூக்கிச் சென்றனர். மக்கள் ஆவேசமாக 'இவனை அகற்றும்' என உக்கிரமாகக் கத்தினர்.  

இப்போது பவுலை எதற்காக அடித்தார்கள் எனக் கூடியிருந்த யாருக்கும் தெரியவில்லை. குற்றம் இன்னதென்று விசாரிக்காமலே பவுல் இரண்டு சங்கிலிகளினால் கட்டப்பட்டார் (அப் 21:11).

இந்த சம்பவம் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை விசாரித்த சூழலை  நினைவு படுத்துகிறது 

ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை கைது செய்த பின்பு அவர் மேல் என்ன குற்றம் சாட்டுவது என ஆலோசனை செய்தனர்!!! 

அவர் பொது மக்கள் மத்தியில் அழைத்து வரப்பட்ட போதும், இவ்விதமாகவே  மக்கள் ''சிலுவையில் அறையும்'' என கூக்குரலிட்டனர் (லூக்கா 23:18, 21 & யோவான் 19:15)  

பவுல் லீசியாவுடன் கிரேக்க மொழியில் பேசினார். கிரேக்க மொழியில் பேசியதைக் கேட்டதும் அந்த நாட்களில் பெரும் கலகம் விளைவித்த ஒரு எகிப்தியன் என பவுலை நினைத்தார். 

ஆனால் பவுல் தாம் ஓர் யூதன் என்றார். மக்களுடன் பேச விரும்புவதாகக் கூறினார். லீசியா பேசுவதற்கு அனுமதி அளித்தார். அதன் மூலம் அவர் செய்த குற்றம் என்னவென்று அறிய விரும்பினார். ஆனால் லீசியாவால் கடைசி வரை அதை அறிய முடியவில்லை (அப் 23:23-30).


Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

சனி, 22 அக்டோபர், 2022

அப் 21: 18-26 எருசலேம் தலைவர்களின் தவறான புரிதல்.

 பவுல் - எருசலேம் சபைத் தலைவர்கள் சந்திப்பு.




அப் 21:18-26

பவுல் எருசலேம் சபை மக்கள் இடையிலான முதலாவது சந்திப்பு ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கும் வகையிலிருந்தது. மறுநாளில் பவுல்  ஆண்டவராகிய இயேசுவின் சகோதரர் யாக்கோபு  தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் பங்கு பெற்றார். ஆண்டவர் கிருபையால் ஊழியத்தில் நடைபெற்ற பணிகள் ஒவ்வொன்றாக விவரித்துச் சொன்னார் (1 கொரி 15:10). 

புறவின மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய  பவுலிற்கு எருசலேம் சபை முன்னதாகவே அங்கீகாரம் அளித்திருந்தது (கலா 2:7-10). 

ஆகவே எருசலேம் சபைத் தலைவர்கள் பவுல்  மூலமாக உருவாக்கப்பட்ட புதிய சபைகளைக் குறித்துக் கேள்விப்பட்டவுடன் மகிழ்ந்து கர்த்தரை மகிமைப் படுத்தினார்கள். 

எனினும் பல ஆயிரம் யூத விசுவாசிகள் எருசலேம்  சபையிலிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவைப்  பின்பற்றினாலும் நியாயப்பிரமானத்தை  வைராக்கியமாகக் கடைப்பிடித்தனர். அவர்களுக்கு பவுல் மேல் கடும் கோபம் இருந்தது.

ஏனெனில் பவுல் மோசேயின்  கட்டளைகளைக்  கடைப்பிடிக்கத் தேவையில்லை என எங்கும் போதிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.  

எருசலேம் திருச்சபைத் தலைவர்களுக்கும் பவுல் மீது யூதர்களுக்கு உள்ள கோபம் தெரியும்.

உண்மையில் பவுல் அளித்த செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பவுல் ஒரு போதும் யூத விசுவாசிகளிடம் மோசேயின் கட்டளைகளைக் கடைப் பிடிக்க வேண்டாம் என போதிக்கவில்லை. 

மாறாக எபேசுவில் வசித்த யூதர்கள் நிமித்தம்  தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்தார் (அப் 16:1-3). இரண்டாவது மிஷனரிப் பயணம் முடிந்த பின்னர் தமது பிரார்த்தனையை நிறைவேற்றும்படி தலை முடியைச் சவரம் செய்து கொண்டார் (அப் 18:18).

ஆனால் அதே சமயம் பவுல் இரட்சிப்பிற்கு நிபந்தனையாக யூத சமய சடங்குகள்  புறவின மக்கள் மேல் திணிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

இரட்சிப்பு கிருபையால் அருளப்படுவது என்பது பவுலின்  அடிப்படை போதனை (எபே 2;8). 

சடங்குகளை ஆசரித்தல், குறிப்பிட்ட உணவு  பழக்கத்தைக் கடைப்பிடித்தல், குறிப்பிட்ட நாளை விசேசமாக அனுசரித்தல் என யூத சமய பாரம்பரியத்தை இரட்சிப்பிற்கு நிபந்தனையாக.  விதிக்கப்படுவதை எதிர்த்தார். 

ஆனால் ஒருவர் அவற்றை விருப்பத்தோடு கடைப்பிடித்தால் குற்றம் சாட்டுவதோ அல்லது குறை கூறுவதோ கூடாது எனப் போதித்தார். 

ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் வகையில் இறைவனை வணங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை இப்படித்தான் வழிபட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக்கூடாது (ரோமர் 14:1-8) என்பது  பவுலின் உபதேசம்.

இதனால் யூத சமய தீவிரப் பற்றாளர்கள்  பவுலை அழித்துவிடக் காத்திருந்தனர். யூத கிறித்துவர்களின் எதிர்ப்பை எருசலேம் சபைத் தலைவர்களும் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. அதே சமயம்  பவுலை யூதர்களும் ஏற்றுக்கொள்ளுவதற்கு என்ன செய்வது என ஆலோசனை செய்தனர். 

பவுலும் யூத சமய ஒழுங்குகளைக்  கடைப்பிடிப்பவர் எனக் காண்பிக்க முடிவு செய்தனர். இதனால் தீவிர யூத சமய பற்றாளர்கள் கோபம் குறையும், அமைதி பிறக்கும் என நம்பினர். 

ஆகவே அவர்கள் பவுலை, பிரார்த்தனை செய்து கொண்ட நான்கு பேருக்கான சமயச் சடங்குகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளும். அப்போது உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டவை தவறான செய்திகள், நீரும் நியாயப்பிரமானத்தை  கடைப் பிடிப்பவர் என எல்லோருக்கும் தெரிய வரும் என ஆலோசனை அளித்தனர். 

பவுல் அவர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். அப்படியே அவர்கள் ஒவ்வொருவருடைய பலி செலுத்தும் செலவை  பவுல் செலுத்தி வந்தார். ஏழு நாட்கள் கடந்தது. 

அவர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் அமைதியாகச் செல்வது போலத்  தோன்றியது. ஆனால் முடிவில் அவர்கள் எண்ணியபடி நடக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அமைதிக்குப் பதிலாக ஓர் பெரிய கலவரம் வெடித்தது. பவுல் சிறை பிடிக்கப் பட்டார்.


Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

வெள்ளி, 21 அக்டோபர், 2022

அப் 21: 1-17 - நண்பர்களின் தவறான புரிதல்.

எருசலேம் நோக்கி பவுலின் பயணம்.

Is it so bad, then, to be misunderstood?  - Ralph Waldo Emerson. 

தாங்கள் வாழ்ந்த காலத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் நீளமானது. பித்தாகரஸ், சாக்ரடீஸ், லூத்தர், கலீலியோ, கோப்பர்நிக்கஸ், நீயுட்டன், என.., அந்த பட்டியல் நீளும்.

அப்படியே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். பவுல் வாழ்க்கையிலும் அவ்விதமாகவே நிகழ்ந்தது.

அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் 21:1 - 22:29 உள்ள பகுதியில் பவுல் அவரது நண்பர்களால், திருச்சபை தலைவர்களால், யூதர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை விவரிக்கிறது.

1. பவுலின் திட்டத்தை, நோக்கத்தை அவரது நண்பர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். (Paul's Friends Misunderstood His Plans - 21:1-17).

2.எருசலேம் திருச்சபை தலைவர்கள் அவரது செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jerusalem Church Misunderstood His Message - 21:18-26)  

3. யூதர்கள் அவரது ஊழியத்தை தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jews Misunderstood His Ministry 21:27- 22:29) 

1. பவுலின் நண்பர்கள் அவரது திட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை.(Paul's Friends Misunderstood His Plans - 21: 1-17):

பயணம் (21:1-2):

பவுல் விரைவாக எருசலேம் திரும்ப விரும்பினார். பண்டிகைக்கு முன்பாக எருசலேமில் இருக்க விரும்பினார். தர்ம சகாய பணத்தை வறுமையில் வாடும் பரிசுத்தவான்களிடம் விரைந்து ஒப்படைக்க விரும்பினார்.

முதல் நாள் மிலேத்துவிலிருந்து கோஸ்தீவு (Miletus to Cos) பயணம். இரண்டாவது நாள் ரோது (Rhodes) தீவு. மூன்றாம் நாள் பத்தாரா (Petera). ஊள்ளூர் கப்பல் ஆதலால் ஒவ்வொரு துறைமுகத்திலும் சரக்குகளை ஏற்றி இறக்கி தாமதம் ஆனது. ஆகவே பவுல் நேரிடையாக நீண்ட தொலைவு செல்லும் பெனிக்கே (Phonenicia) தேசத்தின் கப்பலைக் கண்டு அந்த கப்பலில் தீரு நோக்கிப் பயணப்பட்டார். அது ஏறக்குறைய 650 Km நீண்ட பயணம்.

தீருவில் பவுல் - Paul in Tyre - பவுலின் மன பாரம் (21:3-6):

பவுல் முதல்முறையாக தீரு விசுவாசிகளைச் சந்திக்கிறார். இந்த சபை சிதறடிக்கப்பட்ட  எருசலேம் விசுவாசிகளால் துவங்கப்பட்டதாக இருக்கலாம் (அப் 11:19). அது ஓர் சிறிய சபை. பவுலின் உடன் ஊழியர்கள் அந்த சபை மக்களை தேடிக் கண்டு பிடித்தனர். தீரு துறைமுகத்தில் கப்பலிலிருந்த சரக்குகளை ஏற்றி இறக்க ஏழு நாட்கள் ஆனது. ஆக அந்த ஏழு நாட்களும் பவுல் அவர்களோடு தங்கியிருந்தார். அவர்கள் பவுலை முதன் முதன் முதலாக பார்க்கின்றனர். ஆனாலும் நீண்ட காலம் அறிமுகமானவர் போல பவுலை நேசித்து அன்பு பாரட்டுகின்றனர்.

பவுலுக்கோ மனதில் சபையைக் குறித்து மிகுந்த கவலையும், பாரமும் இருந்தது. குறிப்பாக யூதர்கள் மற்றும் புற இனமக்கள் இடையே இருந்த பிளவு அவரை வருத்தியது. பவுல் ஊழியம் செய்த இடங்களிலெல்லாம் யூத சமய தீவிர பற்றாளர்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். புதிய விசுவாசிகளை யூத சமய பாரம்பரியங்களைக் கைக்கொள்ளும்படி வற்புறுத்தினர் (அப் 15:1).

பவுல் இரு பிரிவு மக்கள் கூட்டமும் இணைந்து செயல்பட விரும்பினார். தமது மூன்றாவது மிஷனரிப் பயணத்தில் புறவின மக்களை எருசலேமில் வாழும் ஏழை சீடர்களுக்குப் பொருள் உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டார். புறவின மக்கள் யூத மக்களிடம் இருந்து ஞான நன்மைகள் பெற்றுக் கொண்டனர். எனவே கிறிஸ்தைப் பின்பற்றிய ஏழை யூத விசுவாசிகளின் பணத் தேவைகளைப் புற இன மக்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ளது என பவுல் போதித்தார் (ரோம 15:25-27).

அதேநேரம் யூத சமயத்தில் வைராக்கியம் உடைய தீவரப் பற்றாளர்கள் பவுலை சிறை பிடித்துத் தண்டிக்க, காவலில் போடக் காத்திருந்தனர். ஆகவே தீருவில் இருந்த சீடர்கள் பவுலை எருசலேம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் பவுல் அதற்குச் சம்மதிக்கவில்லை.

தான் எருசலேம் செல்வது அபாயம் என பவுலுக்கு நன்கு தெரியும். ஆகவே யூத சமய தீவிர பற்றாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட, தமது தர்ம சகாயம் எருசலேம் சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்பட ஜெபிக்கும்படி விசிவாசிகளை வேண்டுகிறார் (ரோமர் 15:31-32).

பவுலின் நோக்கம் எருசலேம் சபை தலைவர்களால் தமது தர்ம சகாய பணி அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் யூத கிறிஸ்தவர்களும் புறவின கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வழி பிறக்கும் என நம்பினார். அகவே பவுல் எருசலேம் விரைந்து செல்ல தீவிரம் காட்டினார். 

செசரியா (Caesarea) - மன்னிப்பின் மாண்பு (21:7-14):

பவுல் பிலிப்புவை செசரியாவில் வைத்துச் சந்திக்கிறார். இது ஓர் உணர்வுப்பூர்வமான சந்திப்பு. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பவுல் கிறிஸ்தவ சீடர்களை துன்பப்படுத்தினார். விசுவாசிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சபைகளை அழித்தார்(அப் 8:1-3). 

பிலிப்புவின் நெருங்கிய நண்பர் ஸ்தேவான். அவர்கள் இருவரும் இணைந்து ஊழியம் செய்தனர் (அப் 6:1-6). ஸ்தேவான் கொலை செய்யப்படும்போது பவுலும் உடன் இருந்தார். பவுல் செய்த கொடுமைகளுக்குப் பயந்து பிலிப்பு எருசலேமை விட்டுத் தப்பி ஓடி சமாரியாவில் ஊழியம் செய்தார் (அப் 8:4-5).

பின்பு காசா வானந்திரத்தில் தேவ பணி செய்தார் (அப் 8:26). அங்கிருந்து புறப்பட்டு ஆசோ நகரத்தில் பணி செய்தார். அதைத் தொடர்ந்து செசரியாவில் சபையை நிறுவினார் (அப் 8:40).

இப்போது இருபது வருடங்களுக்குப் பிறகு பவுலை ஒரு அப்போஸ்தல ஊழியராக பிலிப்பு சந்திக்கிறார். பவுலை அன்போடு தமது வீட்டில் ஏற்றுக் கொள்கிறார். பிலிப்புவின் ஏற்றுக் கொள்ளும் அன்பு யோசேப்பை நமக்கு நினைவூட்டுகிறது (ஆதி 45;5-7). அன்பைக் குறித்து பவுல் உலகப் புகழ் பெற்ற வரிகளை கொரிந்தியருக்கு எழுதிய நிருபம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அவை பவுலின் சொந்த அனுபவத்திலிருந்து பிறந்த வார்த்தைகள். அன்பு சகலத்தையும் தாங்கும். 

பவுல் செசரியாவில் அகபுவை சந்திக்கிறார். அகபு ஒரு தீர்க்கதரிசி. பதினைந்து  வருடங்கள் முன்பாகவே பவுலை அறிந்தவர். எருசலேமில் கொடிய பஞ்சம் வரப் போவதை முன் அறிவித்தவர். அந்தப்படியே எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது எருசலேமில் இருக்கும் சகோதரரருக்கு பண உதவி செய்யும் படி பர்னபாவும் பவுலும் இணைந்து செயல் பட்டனர். பவுலின் மிஷனரிப் பயணத்திற்குத் தொடக்கமாக அது அமைந்தது (அப் 11:27-30).

இப்போது பவுல் எருசலேமில் அனுபவிக்கப் போகும் சிறை அனுபவங்களை அகபு தீர்க்க தரிசனமாக முன் அறிவிக்கிறார். இது பவுலின் இரண்டாவது வகை ஊழியத்திற்கு தொடக்கமாக அமையப் போகிறது. பவுல் எருசலேம் தேவாலயத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். ஆலோசனை சங்கத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். அரசர்கள் முன்பாக சாட்சி கொடுக்கப் போகிறார். 

பவுல் அனுபவிக்கப் போகும் துயரங்களை அறிந்த நண்பர்கள் அவரை எருசலேம் செல்ல வேண்டாம் என அழுது கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பவல் அதை ஏற்க மறுத்தார். சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்ல ஆண்டவருக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.  

புறவின மக்கள் சபை, அவர்களது எதிர்காலம் குறித்த பவுலின் பாரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பவுல் பிடிவாதமாகத் தாமாகவே துயரத்தில் சிக்கிக் கொள்வதாக எண்ணினார்கள்.

ஆனால் பவுலின் மனம் புற இன விசுவாசிகளை எருசலேம் சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாஞ்சித்தது. எதிர்காலத்தில் எருசலேம் சபை அவர்களை வழி நடத்த வேண்டும் என விரும்பினார். 

அதற்காகத் தாமே நேரில் சென்று எருசலேம் சபைத் தலைவர்களிடம் ஊழியத்தில் உருவான சபைகளைப் பற்றி, விசுவாசிகள் குறித்தும் விளக்க விரும்பினார். அதற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார். பவுல் எருசேலம் நோக்கிப் பயணப்பட்டார்.

Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

புதன், 19 அக்டோபர், 2022

ஏன் வேதத்தை முறையாகக் கற்க வேண்டும்?

வேதத்தைக் கற்பது அவசியம்


1. பக்தி உணர்வில் நிலை பெற வேண்டும். (எபேசியர்: 3: 16-19). 

மனதில் பக்தி எனும் தீபம் சுடர்விட வேத வார்த்தைகள், இறை வேண்டல் எனும் எண்ணெய் தொடர்ந்து ஊற்றப்பட வேண்டும். வேதத்தை முறையாக கற்றுக் கொள்வதன் வழியாகச் சிந்திக்கும் திறன் வலிமை அடைகிறதுஇறை வேண்டுதல் செய்வதன் மூலம் சிந்தித்ததைச் செயல் படுத்தும் ஆற்றல்  கிடைக்கிறது. எனவே  இறை பக்தி மனதில் நிலை நிற்க வேதத்தை ஆவலுடன் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.  

2. மனம் தூய்மை அடைய வேண்டும். (ரோமர்:12: 1-2).

மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே வாழ்வின் மிக மேன்மையான செயல்மனித உள்ளம் இயல்பாகவே பெருமை, பேராசை, பொறாமை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், பிறரை அடக்கி ஆள முற்படுதல்.., போன்ற பல தீய  உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறது. இத்தகைய தீய உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து உள்ளம் விடுதலை அடைய வேண்டும். 

அன்பு, உண்மை, பொறுமை,சாந்தம், கருணை, இரக்கம், சகிப்புத்தன்மை,பணிவு, அடக்கம், பிறர் நலம் விரும்புதல், நல் நம்பிக்கை, சந்தோஷம், இச்சையடக்கம், மனநிறைவு.., போன்ற நல்ல உணர்வுகள் மனதை ஆளுகை செய்ய வேண்டும். 

வேத வசனங்கள் மனதில் தொடர்ந்து விதைக்கப்படும் போது தீய பண்புள் அகல்கிறது. நற்பண்புகள் பிறக்கின்றது. எனவே வேதத்தைத் தொடர்ந்து கற்க வேண்டும்.

3. இறை பிரசன்னத்தில் வாழ வேண்டும். (யாத்: 33:15).

அதிகாரம், பணம், பொருட்கள், உறவுகள் அளிக்கும் மகிழ்ச்சி நிரந்தரமல்ல. அவை இருக்கும் வரை மட்டுமே சந்தோஷம் தரும். ஆகவே இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கவலை மனதை விடாமல் அலைக்கழிக்கும். இழந்து விடுவோமோ என்கிற அச்சம் விடாமல் துரத்தும்.  

உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் தேடி, ஓடி அடைவதல்ல. அது உள்ளத்தில் உணர்வது. உள்ளம் இறை பிரசன்னத்தில் நிலைத்து நிற்பதே நிலையான இன்பம். அந்த மகிழ்ச்சி சூழ்நிலைகளால் மாறாது.  

இறைமை என்பது ஓர் அனுபவம். இறைபிரசன்னத்தில் வாழ்வதை விட மேலான ஆசீர்வாதம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.வேத வசனங்கள் கடவுளை வெளிப்படுத்துகிறது. அவை மன மகிழ்ச்சியைத் தருகிறது. கடவுளின் அன்பை உணர்ந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலைகள் மறையும். மனதின் பாரம் குறையும். நம்பிக்கை பெருகும்.

வேதத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து தியானித்து வருவதன் மூலம் தேவ பிரசன்னம் எப்போதும் நம்முடன் இருக்கும். இந்த தெளிந்த புத்தியை அடைய வேதத்தை முறையாக் கற்பது அவசியம்.

4. பற்றுறுதி - வைராக்கியம் வளர வேண்டும். (எபிரேயர் 12:1). 

ஆழ்ந்த பக்தியில் நிலைத்திருப்பது எளிதானதல்ல. மனதைத் தூய்மையாகப் பாதுகாத்திட கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு முயற்சி தேவையில்லை. ஆனால் உயர்ந்த வாழ்க்கை வாழ கடும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு அவசியம். 

விளையாட்டு வீரர்களைக்  கவனித்துப் பாருங்கள். எவ்வளவு கவனமாகப்  பயிற்சி பெறுகின்றனர். நேர்த்தியான பயிற்சியாளர். உணவில் கட்டுப்பாடு. உடலைப் பராமரிப்பதில் கடும் உழைப்பு. துல்லியமான நேர நிர்வாகம். இலக்கு நோக்கி பயணம்.

இறை வாழ்க்கை வாழ இத்தகைய பயிற்சி தேவை. மனதில் வைராக்கியம் வேண்டும். பிடிவாதம் என்பது சுய ஆசையை நிறைவேற்ற விரும்புவது. வைராக்கியம் என்பது ஒரு உன்னத குறிக்கோளை அடைவதற்காக அர்ப்பணித்து வாழ்வது. மனதில் வைராக்கியம் இருந்தால் தோல்விகளால் துவண்டு விட மாட்டோம். மனம் சோர்வில்  மூழ்கி விடாது. வீழ்ந்தாலும் மீண்டும் எழும். வேத வசனங்களை இடைவிடாது கற்றுக் கொள்வதன் மூலம் மனதில் வைராக்கியம் உண்டாகும்.

5. உரையாடலில் தெளிவு இருக்க வேண்டும். (1 தீமோ: 6:3-5).

சமய உரையாடல்கள் அன்பை விதைக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிறர் நலம் விழைய வேண்டும். வாழ்வை நேர்மையான முறையில் வாழ ஊக்கம் தர வேண்டும். 

நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமயம் சார்ந்து பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இறை உபதேசங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சமய  உரையாடல்களில் ஈடுபடக் கூடாது. அவை ஒருபோதும் வெறுப்பு, துவேஷம் இவற்றைத் தூண்டக்கூடாது. பல அடிப்படை வாத சமய உரையாடல் கடும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. 

வேதத்தின் கருத்துக்கள் அறிவியல் போலத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்து எழுதப்பட்டது கிடையாது. அவை விசுவாசம், அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவை. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.

வேதத்தை முறையாகக் கற்று அதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருள் வெளிப்படும். அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட விளக்கங்கள் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவும். அத்துடன் தாழ்மை உணர்வுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.

6. வளர்ச்சி அடைய வேண்டும். (1 பேதுரு: 2-3). 

ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படும் ஓர் கொடை. மேலும் கற்பதற்கு ஓர் வாய்ப்பு. கற்பதன் வழியாக மனம் மேம்படுகிறது. மனவளம் அடைகிறது. தீய உணர்வுகள் அகல்கின்றன. நல் உணர்வுகள் பெருகுகிறது. மனதின் எண்ணங்கள் நேர்மறையாக உதிக்கின்றது. எனவே வாழ்வு வளர்ச்சி பெற வேதத்தை அனுதினமும் கற்க வேண்டும். தியானிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.


படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

சனி, 1 அக்டோபர், 2022

Acts 20: 28-38 - கவனம் தேவை

 விழிப்புடன் இருங்கள்.

தியான பகுதி: அப்போஸ்தலர் நடபடிகள் - 20: 28-38

பவுல் தமது மூன்றாவது மிஷனரி ஊழியத்தை எபேசு நகரில் நிறைவேற்றி விட்டு எருசலமுக்கு திரும்பப் புறப்படுகிறார். இந்தப் பகுதியில் மீண்டும் ஊழியம் செய்யும் திட்டம் அவருக்கு இல்லை. அவர் மனதில் சபையின் எதிர்காலம் குறித்த பாரம். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கை குறித்த கவலை. அவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற வாஞ்சை. ஆக  விடை பெறும் முன்பாக மிகுந்த மன துக்கத்துடன் திருச்சபை தலைவர்களுக்கு தமது கடைசி செய்தியை அளிக்கிறார். 

This is a message for the church elders. Pastors. leaders. 

 Acts 20: 28-38 இந்தப் பகுதியில் திருச்சபை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் அபாயம் குறித்து எச்சரிக்கை உள்ளது. அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அந்த போராட்டங்களை முறியடித்துச் சபையை சபையை பாதுகாக்க வேண்டும். விசுவாசிகள் பின்வாங்காது ஆவிக்குரிய முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய உபதேசம் உள்ளது. அவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும்.

I. Acts 20:28 - திருச்சபை முக்கியம் 

இந்த வசனத்தில் தேவன் - சுய இரத்தம் - பரிசுத்த ஆவியானவர் - மந்தை - உங்களைக் குறித்த எனும் வார்த்தைகள் மிக முக்கியமானது.

திருச்சபை குறித்து சாதாரணமாக, எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது தேவனுக்கு மிக முக்கியமான ஒன்று. 

ஏனெனில் திருச்சபை அவர் பெயரில் இயங்குவது. The Church of God.

அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு மிக மிக முக்கியமானது. ஏனெனில் திருச்சபை அவர் தமது சொந்த இரத்தத்தைச் சிந்திச் சம்பாதித்து உருவாக்கியது.

பரிசுத்த ஆவியானவர் திருச்சபையைப் போதித்து வழி நடத்துகிறார். அது அவரின் கூடாரம். 

It is a serious thing to be a Church leader.

A. Acts 20:29 - Dangers Around Us:

பவுல் இந்த வசனத்தில், திருச்சபைக்கு வெளியிலிருந்து வரும் அபாயம் குறித்து எச்சரிக்கிறார். அதை "கொடிதான ஓநாய்கள்" எனும் வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

திருமறையில் ஓநாய்கள் என்பது "கள்ள போதகர்களை" குறிக்கிறது.

மத்தேயு 7:15

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 10:16 

ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

கள்ள போதகம் என்பது "புளித்த மாவு" போல (மாற்கு 8:15). ஒரு தவறான உபதேசம் சபையின் மொத்த ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் அழித்து விடும்.

கள்ள தீர்க்கதரிசிகள், போதகர் முக்கிய நோக்கம் பணம், சுய நலன். அதற்காக அவர்கள் சபையை ஏமாற்றி மோசம் செய்து விசுவாசிகளை அடிமைப் படுத்துவார்கள். (2 Peter 2: 1-3)

How important it is that believers know the word of God to detect and defeat these religious recketeers.

B. Acts 20:30 - Dangers Among Us:

இந்த வசனத்தில், திருச்சபை உள்ளே இருக்கும் விசுவாசிகள் கலகம் உருவாகிறது. அதற்கு முக்கிய காரணம் Power and Position". தனக்கு முக்கியம் இல்லை, மதிப்பு இல்லை என்று சபைக்கு எதிராகச் செயல்படும் மக்கள் சபை சரித்திரம் முழுவதும் உள்ளார்கள். அதிகாரத்தில் இருப்பதற்காகக் குழுக்கள் உருவாக்கி சபையைப் பிளவு படுத்தி பெரும்பாலான விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும் கூட்டம் சபைக்குள் வரும் என பவுல் எச்சரிக்கிறார் (3 John 9-11).

 C. Acts 20:31-35 - Dangers Within Us:

இந்த வசனத்தில், வெளியிலிருந்து தாக்கும் போராட்டங்களை விட நமக்கு உள்ளிருந்து எழும்பும் தீய எண்ணங்கள் தன் அதிகமாக நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும் என பவுல் எச்சரிக்கிறார்.  

பவுல் நம்மை அழிக்கும் 5 குணங்களைக் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்கிறார். 

1. Acts: 20:31 - Carelessness - அலட்சியம்:

இந்த வசனத்தில், விழிப்புடன் இருக்கத் தவறுவது அல்லது அலட்சியமாக இருப்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும். 

இன்று நாம் கடவுளின் பிள்ளையாக வாழ எத்தனை ஊழியர்கள் உழைத்தனர் என்பதை மறந்து போகக் கூடாது. 

இந்த நிலையை அடையக் கடந்த காலத்தில் நாம் கண்ணீர் விட்ட நாட்களை மறக்கக் கூடாது. 

பவுல் எச்சரிக்கிறார்: நான் இரவும் பகலும் கண்ணீரோடு புத்தி சொன்னேன். இடை விடாமல் ஊழியம் செய்தேன். ஒவ்வொருவருக்கும் பணி செய்தேன். அதை நினைவில் வைத்திரு. விழித்திரு. (Heb 13:7-8).

Paul's warning and weeping should be constant reminder to us to take our spiritual responsibility seriously.

2. Acts: 20:32 - Shallowness - நுனிப்புல்:

இந்த வசனத்தில், பரிசுத்தம், பக்தி விருத்தி இந்த இரண்டு வார்த்தைகள் முக்கியமானது. 

நம் ஆவிக்குரிய வாழ்க்கை சரியாக இருக்க வேதம் வாசிப்பது மற்றும் இறை வேண்டுதல் இவை இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். 

ஜெபம் ஆண்டவரோடு பேசுவது. வேத தியானம் இறைவன் நம்முடன் பேசுவது. ஜெபம் உணர்வுப்பூர்வமான தொடர்பு. வேதத்தைத் தியானிப்பது அறிவுப்பூர்வமானது. இவை இரண்டும் இணைந்து செயல் புரிவது அவசியம்.

வேதம் நம்மைப் பரிசுத்தம் செய்கிறது இறை வேண்டுதல் பக்தி விருத்தி அடைய உதவுகிறது. (1 Samuel 12:23 / Acts 6:4)

பவுல் ஒரு தலைவர் தனது வாழ்க்கையைச் சரியாக அமைக்காமல் திருச்சபையை வழி நடத்த முடியாது என எசசரிக்கிறார.  

3. Acts: 20:33 - Covetousness - இச்சியாதிருப்பயாக:

இந்த வசனத்தில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மூன்றாவது குணம் "இச்சியாதிருப்பயாக."

இச்சியாதிருப்பயாக என்பதன் பொருள்: மற்றவர்களது பொருளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆசைப்படக் கூடாது.

அது மட்டுமல்லாமல், நம்முடைய தேவைக்கும் அதிகமாக வாங்கி குவிப்பதும் இச்சை தான். தேவையற்ற பொருட்களைத் திரும்பத் திரும்ப வாங்குவது பேராசை. 

நீங்கள் ஒரு புதிய பொருளை வாங்கினால், உங்களிடம் உள்ள பழைய பொருட்களைத் தேவைப் படுபவர்க்குக் கொடுங்கள்.

"இச்சியாதிருப்பயாக." என்பது பத்து கற்பனைகளில் கடைசி கட்டளை. 

யாத்திராகமம் 20:17:

“அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!”

இந்த கட்டளை மீறப்படும் போது மற்ற கட்டளை மீறப்படும். பிறர் பொருள் மீது வைக்கும் ஆசை பொய் சொல்ல வைக்கும். திருடத் தூண்டும். கடைசியில் கொலையில் முடியும். 

பொருளாசை என்பது தேவனுக்கு விரோதமான  ஆராதனை என வேதம் கூறுகிறது (Eph 5:5, 1 Col 3:5). உண்மை ஊழியனுக்குப் பண ஆசை, இழிவான ஆதாயம் விரும்பும் இச்சை இருக்கக் கூடாது என வேதம் கூறுகிறது (1 Tim 5:18).

4. Acts: 20:34 - Laziness - சோம்பல்:

பவுல் வேலை செய்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார். ஊழியத்தில் ஊதியம் பெறுவது தவறல்ல (Luke 10:7; 1 Tim 5:18). But they be should certain that ther are really earning those salaries

பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை செய்யாமல் இருக்க முடியும். ஆனால் அவர் முன் மாதிரியாக இருக்க விரும்பினார். 

இதன் பொருள் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும். சோம்பல் நம் ஆவிக்குரிய முன்னேற்றத்தை அழித்து விடும். (Prov 24: 30-34).

5. Acts: 20:35 - Selfishness - சுயலாபம்:

இறுதியாக பவுல் ஆதாயத்திற்காக இறைவனைத் தேடுவது, ஊழியம் செய்வது தவறு என எச்சரிக்கிறார் (1 Tim 6:5-12).

Ministry means giving not getting. ஊழியம் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல. அதன் பொருள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின் பற்றுவது. அவர் காண்பித்த பாதையில் நடந்து செல்வது.

"வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்." எனும் வசனம் பாக்கிய வசனத்தில் இல்லை. 

இந்த வசனத்தை ஆண்டவர் உபதேசித்தார் என்று மற்ற சுவிஷேச பகுதியிலும் எழுதப் பட வில்லை. 

ஆனால் பவுல் ஆண்டவர் இந்த வார்த்தைகளைக் கூறியதாகச்  சொல்கிறார். அதன் பொருள் மற்ற வார்த்தைகள் ஆண்டவர் பிரசங்கம் செய்தார். இந்த வசனத்தை வாழ்ந்து காண்பித்தார். ஹே demonstrated it. அவர் தம்மையே முழுவதும் அர்ப்பணித்தார். அவர் வாழ்வில் சுய நலம் துளியும் இல்லை.

Dr. Earl. V. Pierce used to call "the supreme Beatitude" because, unlike the other beatitudes, it tells us how to be more blessed. இது அதிக பாக்கியம்.

The blessing doesn't come in accumulating wealth, but in sharing it. 

Amen.

Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.